பாரதப் பூமி பழம்பெரும் பூமி
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! ஜயஜய பவானி என்று தொடங்கும் கவிதையில் பாரதியார் சத்ரபதி சிவாஜி தன்னுடைய படைவீரரர்களுக்கு ஆற்றிய எழுச்சி உரையை, கிட்ட தட்ட இரண்டாம் கீதை என்றும் சொல்லும் வீர உரையை நமக்காக வழங்கியுள்ளார். வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? நாமெல்லாம் இன்று காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் பார்த்து மனதில் புழுங்குவதை அன்றே பாரதி தன்னுடைய வைர வரிகளில் சொல்லிவிட்டான். இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை? என்று போர் புரிந்து நம் தர்மத்தை காத்து, ஆலயம் பேணி, அறம் நிலைநாட்டிய சத்ரபதி சிவாஜி மஹாராஜின் புண்ணிய திதி இன்று. நாம் இன்று ஆலயம் தொழுவது அவரால் மட்டுமே! பாரதியின் வரிகளை நெஞ்சில் நிறுத்துவோம் மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல...