இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காம தகனம்

படம்
  காம தகனம்   பன்னிரெண்டு   வயது குழந்தைகளான   ராமனையும்   லக்ஷ்மணனையும் , தந்தை நீ , நல் தாயும் நீ என்று தசரதன்   விஸ்வாமித்ரனிடம்   ஒப்படைக்க மூவரும் தருவனம் நோக்கி நடந்தார்கள் .   சரயுவை   தாண்டி ஒரு வனப் பகுதியை அடைந்ததும்   ராமன் , இது என்ன இடம் என்று விஸ்வாமித்ரனிடம் கேட்கிறான் .   நல்லவர்க்கும் , அடியவர்க்கு இரங்கும் , சந்திரனை தலையில் சூடிய சிவபெருமான் முன்பொரு காலத்தில் இங்கு தவம் ஏற்று இருந்தான் . அப்போது இந்த இடத்தில் இருந்து மன்மதன் மலர் கணைகளை   தொடுக்கவும் அதனால் கோபமுற்ற சிவபெருமான் சினம் கொண்டு தன் நெற்றிக் கண்ணால் பார்க்க பூளை மலர் போன்ற மென்மையான மேனியுடைய மன்மதன் எரிந்து அங்கம் இழந்தவன் ஆனான் .   “திங்கள் மேவும் சடைத்தேவன் மேல் மாரன் வேள் , இங்கு நின்று எய்யவும் ,   எரி தரும் நுதல் விழிப் பொங்கு கோபம் சுடப் ,   பூளை வீ அன்னதன் அங்கம் வெந்து , அன்று தொட்டு ,   அனங்கனே ஆயினான் .” மார வேள்   - மன்மதன் , மக்க...