பாசுரப்படி ராமாயணம் Part - 12
பாசுரப்படி ராமாயணம் Part - 12 அயோத்தியா காண்டம் "சித்திரக்கூடத்து இருப்ப, தயரதன் தான் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ! நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் எறத் " கங்கையைக் கடந்து சித்திரக்கூடம் வந்தடைந்தனர். அங்கு ராமனைப் பிரிந்த துயரால் வாடிய தயரதன், உன் மகன் பரதனுக்கு பழி ஏற்படுத்தி என்னையும் நீள் வானத்துக்கு செலுத்துவதால் என்ன பெற்றாய் கைகேயி! நானும் வானகம் செல்கிறேன் என்று தசரத சக்ரவர்த்தி வானேறினான். இந்த வரிகளும் பெருமாள் திருமொழியில் குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் இருந்து தொகுக்கப் பட்டுள்ளது. கம்பன், நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து, ஒரு நெறி நின்ற அனகன், அம் கணன், ஆயிரம் பெயருடை அமலன், சனகன் மா மடமயிற்கு அந்தச் சந்தனம் செறிந்த கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுறக் காட்டும். தேவர்க்கும் மானுடர்க்கும் சம நிலையில் நின்று அருளும் ஆயிரம் நாமங்களையுடைய ராமன், சனக...