இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனியொருவனுக் குணவில்லை யெனில்

படம்
     இன்று சுவாமி ஓம்காரானந்தாவின் பிறந்த தினம். திருவல்லிக்கேணியில் பாரதி வசித்து வந்தபோது ஒரு இரவில் யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டினார். தேச விடுதலைப் பாடலைப் பாடிக்கொண்டே பாரதி, கதவை திறந்தால் மெலிந்த தேகத்துடன், நோயுற்ற தோற்றத்துடன் ஒரு பிச்சைக் காரர். வாசலில் நின்றவரோ, என்ன சுவாமிகளே பாட்டு பாடிக் கொண்டு காலம் கழிக்க முடியுமா? தேச விடுதலைக்கு போராடிய எனக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லை. பிச்சை எடுக்கலாமா என்று இருக்கேன். பாரதி! எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது என்றார். யார் நீ என்ற பாரதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை தெரியலையா? நான் தான் ப்ரஹ்மச்சாரி, நீலகண்டன் என்றார். பாரதியாருக்கு ரத்தம் கொதித்தது. அவருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அன்று அவர் பாடியது தனியொருவனுக் குணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம். ஆம் 20,000 வீரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து, ரகசியமாக ஆயுதங்கள் வாங்கி, வீர் சாவர்க்கருடன் சேர்ந்து விடுதலை திட்டங்கள் தீட்டி, பாரத மாதா இயக்கத்தை- அபினவ பாரத இயக்கத்தைத் துவங்கி, சூரியோதயம் பத்திரிகை நடத்தி, மாப்ள போராட்டத்தில் ...

வீடினர் அரக்கர்

படம்
                                                                             வீடினர் அரக்கர் To make one's eyebrows raise while the curtain raises! எடுத்த எடுப்பிலேயே பிரமிப்பை ஏற்படுத்துவதோடு துரிதமாக கதையையும் கொண்டு செல்வது கதாசிரியனின் தனித்துவம். கம்பன், கற்பனையிலும் அதை காட்சிப் படுத்துவதிலும் உயர்ந்து நிற்கிறான். தசரதன் தனக்குப் பின் அயோத்தி மக்களை காக்க, அவர்கள் நலனைப் பேண ஒரு வாரிசு வேண்டும் என்று சொல்லவும், வசிஷ்டர் தன் எண்ண அலைகளை முன்பு நடந்த சம்பவத்துக்கு ஓட்டுகிறார். தேவாதி தேவர்கள் அனைவரும் பிரம்ம தேவரிடம், அரக்கன் இராவணனின் கொடுமையினால் அவதிப்படுவதாகவும், பிரம்ம தேவர் அவர்களை காக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்கின்றனர். இதை கேட்ட பிரம்மன், அவனுக்கு வரத்தை கொடுத்தவன் நான், என்னால் ஒன்றும் செய்ய முடியாது வாருங்கள் முக்கண் மூர்த்தியை கண்டு பிர...