பாசுரப்படி ராமாயணம் Part -4

 

பாசுரப்படி ராமாயணம்
Part -4
பாலகாண்டம்

ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரின் வேள்வி காக்க அயோத்தி  விட்டு  தரு வனம் நோக்கி நடந்தார்கள். அங்கு,

********************************************

மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி வல் அரக்கர் உயிர் உண்டு
********************************************
வேள்விக்கு இடையூராக நின்ற தாடகையையும் சுபாகுவையும் ஓர் வெங்கணையால் வீழ்த்தினர்.

இதை கம்பன்,

எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்.

விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.



Part -3: https://m.facebook.com/story.php?story_fbid=5779001592152549&id=100001282970920

#பாசுரப்படிராமாயணம் #pasurappadi #Ramayanam #பாசுரப்படி_ராமாயணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம தகனம்

பாசுரப்படி ராமாயணம் Part - 27

பாசுரப்படி ராமாயணம் Part - 23