பாசுரப்படி ராமாயணம் Part - 20
பாசுரப்படி ராமாயணம்
Part - 20
ஆரண்ய காண்டம்
கங்குலும் பகலும் கண்துயில் இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால் கவந்தனை மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,
அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
தலைப்பட்டு,
மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது, வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது பிறவி' என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க,
விருந்துசெய்து இருந்த வேலை,
போனது என் பிறவி சுழற்சி, போனது என் பற்று. என்றாள்
நீண்ட காலம் தவம் இருந்த சவரி. இனிமேல் பிறப்பு பிழிந்து என்று சொன்னபடியே அவர்கள் உண்ண கனிகளை கொடுத்தாள்.
அருந் தவத்து அரசிதன்னை
அன்புற நோக்கி, 'எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய்;
அம்மனை! வாழி' என்றார்.
பின், அவள் உழந்து பெற்ற
யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து, தான் அத்
தனிமையின் இனிது சார்ந்தாள்;
அன்னது கண்ட வீரர் அதிசயம்
அளவின்று எய்தி,
பொன் அடிக் கழல்கள் ஆர்ப்ப,
புகன்ற மா நெறியில் போனார்.

கருத்துகள்
கருத்துரையிடுக